மழைநாளில் என்றாவது மாயமாய் தோன்றும் என் வானவில்லே!!
யாரேனும் உனைக்கண்டதுண்டோ என் வானவில்லே!!❤
உனை மறைக்கவில்லை நான் மறக்கவுமில்லை
எங்கே இருக்கிறாய் என் வானவில்லே?💕.
என் விருப்பம் வேண்டுதல் வரம் யாவும் நீ
என் இருண்ட வான்வெளியில் தோன்றிய அற்புத ஒளியுமிழ் விண்மீன் நீ
என் நினைவுகளின் ஏடுகளைப் புரட்டி உன் உருவம் தேடினேன்.💕
என் விழிகள் விரிய அண்டவெளி முழுதும் உனை மட்டுமே காணவேண்டும்.👀
என் இதயவீணை மீண்டும் மீண்டும் உன் நினைவையே மீட்டுகிறது. ♥
ஏன் எனது நாள் மட்டும் இவ்வளவு சிறிதாகப் போனது
என் இதயத்தை நீ எடுத்துப் போனாயோ!♥
எல்லா இரவும் பகலும் நீ என்னோடு கழித்த பொழுதுகளை நினைவூட்டுதே
என் நித்திரையிலும் உன் பெயர் என் சுவாசம் ஆனதே.♥
கோமகள் குமுதா