வீட்டில் உள்ளவர்களோடு குஸ்தி, மல்யுத்தம், வாய்ச் சண்டையில் அலுத்துப் போன பதிவர் வெளியில் இருப்பவர்களோடு சண்டையிட எண்ணினார். ஏதாவது புதிய வீர விளையாட்டு கற்றுக் கொள்ள விரும்பினார். ” கயல்விழி இரு சற்று விளையாடி விட்டு வருகிறேன்” என்ற வசனத்தை தானும் எம்ஜிஆர் போல் பேச மட்டும் விரும்பாமல் அவரைப் போலவே வாள் சண்டை கற்றுக் கொள்ள விரும்பிய பதிவர் அந்தப் பயிற்சி கூடத்திற்கு சென்றார்.
பதிவரின் வீர விளையாட்டு.🤺🤺🤺
