உயிர் போனாலும் கல்லான மரம் என்றுஎன்னைக்காட்சி பொருளாய் வைப்பார்🌵🌵🌵 காடுகளை அழிக்கும்கயவர்களே உயிர் போனால் உமை எரிக்க கணநேரம் தாமதிக்க மாட்டார் 🦂🦂🦂 பறவை விலங்குகளின் எச்சமாய் பரவி நீ வெட்ட வெட்ட முளைப்பேனடா🌾🌾🌾🌾 எல்லா உயிர்களையும் கொன்று அழித்தது போதாதென்று உன் இனத்தையே சாதி மதம் என்ற பெயரால் வெட்டி அழி(க்)கிறாய் ஏனடா.🌳🌳🌳 வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலாரின் வாரிசாடா நீ🍁🍁🍁 வாழையடி வாழையாகஉன் குலம் தழைக்க வீட்டு வாசலில் என்னை வெட்டிContinue reading “மரம் பேசுகிறது”
Category Archives: கவிதைகள்
மண்ணின் மகள்
பச்சரிசி பல்லழகிஎன்றாய் தஞ்சைத்தரணி ஆண்ட சோழனா நீ? வீரமாய் நான் தழுவும் புருவ வில்லழகி என்றாய்மலைநாட்டரசன் சேரனா நீ ? முத்துசிப்பி கவிழ்த்து வைத்த கண்ணழகி என்றாய் மதுரையாண்ட பாண்டியனா நீ? தேனூறும் கொவ்வைச் செவ்வாயழகி என்றாய் கொங்கு வேந்தனா நீ ? தங்கச்சிலையே என் மதி மயங்குதடி சிற்பமே என்கிறாய்பல்லவனா நீ கவிதை சொல்லி காதல் கதைகள் பேசும்கவிஞனா ?யாரடா நீ ? உனக்காகவே கைகளில்பைந்தமிழ் மாலையுடன் காத்திருக்கிறேன்மண்ணின் மகள் ….. கோமகள் குமுதா
புத்தகத் திருநாள்
வாசித்தாலும் வாடாமலர்கள்நேசிப்பவரை உய்விக்கும் உன்னத மலர்கள்சுவாசிப்பவருக்கு சுவர்க்கம் காட்டும் சுந்தர மலர்கள்புத்தியை கூட்டும்புத்தக மலர்கள். இனிய புத்தக நாள் வாழ்த்துகள் நட்பூக்களே கோமகள் குமுதா
என் விளையாட்டு அனுபவம்.
நானும் ஒரு தடகள விளையாட்டுப் பெண் என்ற நோக்கில் நீரஜின் ஜாவலின் த்ரோவை அவ்வளவு ரசிச்சேன். நான் பள்ளி நாட்களிலிருந்து சாட்புட் ,டிஸ்க், ஜாவலின் எல்லாத்திலும் வின்னர். கிரவுண்டிலே இறங்கி விளையாடுறவங்களுக்கு தான் விளையாட்டின் பெருமை அருமை தெரியும். பார்வையாளர்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம். ஒரு டீமாக விளையாடும் கபடி, வாலிபால் விளையாட்டை BSNL நேசனல் லெவலில் எப்பொழுதும் நம்ம தமிழ்நாடு தான் சாம்பியன். ஒலிம்பிக்ஸ்சில் நம்ம தமிழ்நாட்டு பெண்கள் ஓடினதை பார்க்கும் போது நான் அதைContinue reading “என் விளையாட்டு அனுபவம்.”
சாலச் சிறந்த பொய்
உன்னை மட்டும் தான் பிடிக்கும் என்றுகண்ணைச் சிமிட்டிச் சொல்லும் அந்தபொய் மட்டுமே நீ சொல்லும்பொய்களில் எனக்கு பிடித்தசாலச் சிறந்த பொய் என்றறிவாயா அன்பே.♥️கோமகள் குமுதா