
தொல்தமிழ் வாழ்ந்த லெமூரியா கண்டம் மூழ்கியதே
மீண்டும் சங்கப்பலகை புதிதாக கீழடியில் வைகை நதியில் தோன்றியதே
சங்கத்தமிழ் மூன்றும் தா என்று ஔவை கேட்ட இரண்டு சங்ககாலமழிந்து நான்மாடக்கூடலிலே முத்தமிழ் வளர்த்த மதுரையிலே கடைச்சங்கம் பிறந்ததுவே
உலகம் போற்றும் என் தமிழை நான் பிறந்த மண்ணில் வளர்க்க வழியில்லையே.
உயிர்குயிராம் எம் செம்மொழி வாழ வண்ணத்தமிழ் வளர்க்க
வானோரும் வியந்து நோக்க வேண்டுகிறேன் தமிழ்த்தாயே உன்னை.
இக்கணமே படைத்திடு இனிய தமிழ் காக்க புத்தம்புது பூமி ஒன்று.
செம்மொழியே என் தாய்மொழியே நீ வாழிய வாழியவே.
கோமகள் குமுதா