இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகாலச்சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெடுத்தான் . ஆனால், அது சாதாரண விசயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணை கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள். நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழேContinue reading “சோழர்களின் நீர் மேலாண்மை.”
Author Archives: komagalkumudha
கனவுகளைத் தின்னும் மான்குட்டி
சங்ககால பாடல்களில் உள்ள தமிழர்கள் செய்த சர்வதேச வணிகத்தை பற்றிய அரிய தரவுகள்.
தமிழரும் வாணிபமும் பழந்தமிழ்நாடு : உழவு, கைத்தொழில், வாணிகம் என்னும் மூன்றுமே ஒரு நாட்டு மக்களின் நாகரிக நல்வாழ்வுக்கு அடிப்படையாகும். ஒரு நாட்டின் செல்வ வளத்திற்கு ஏதுவான தொழில் வாணிகத் தொழிலேயாகும். ஐவகை நிலங்களான தமிழகத்தை சேர சோழ பாண்டியர் என்னும் மூவேந்தர்கள் தொன்று தொட்டு நிலையாக ஆண்டு வந்ததால் பழந்தமிழகம் சேரநாடு சோழநாடு பாண்டியநாடு என முப்பெரும் பிரிவாகப் பாகுபட்டிருந்தது. மூவேந்தர்களும் அவர்களின் துறைமுகப்பட்டினங்களும்: தொண்டி, முசிறி,நறவு, மாந்தை, காந்தளூர், விழிஞம் ஆகியவை சேரநாட்டுத் துறைமுகங்கள்.உவரிContinue reading “சங்ககால பாடல்களில் உள்ள தமிழர்கள் செய்த சர்வதேச வணிகத்தை பற்றிய அரிய தரவுகள்.”
MBBS படிப்பும் பயிற்சியும் சோழர்கள் காலத்தில் எப்படி இருந்தது? படித்துப் பாருங்கள் நட்பூக்களே
சோழர்கள் காலத்து தமிழும் மருத்துவமும் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் சமணத்துறவிகள் தங்கள் பள்ளிகளில் அன்னதானம், அபயதானம், ஒளடததானம், சாத்திரதானம் ஆகியவற்றைச் செய்ததாக மதுரை மாவட்டத்தின் மலையில் உள்ள பிராமி கல்வெட்டுகளால் அறிகிறோம். இக்கொடைகள் முறையே உணவு, அடைக்கலம், மருத்துவம், கல்விக் கொடைகள் எனப் பொருள்படும். மிகக் குறைந்த அளவிலேயே தமிழ்நாட்டில் மருத்துவம் பற்றிய கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. மருத்துவ மூலிகைகளைப் பயிரிடுவதற்கு செங்கொடிக்காணம், கண்ணிட்டுக் காணம் போன்ற வரிகள் விதிக்கப்பட்டதையும், மருத்துவர்களுக்கு ‘மருத்துவப்பேறு’ என்ற நிலமானியம் கொடுக்கப்பட்டதையும் பல்லவர்Continue reading “MBBS படிப்பும் பயிற்சியும் சோழர்கள் காலத்தில் எப்படி இருந்தது? படித்துப் பாருங்கள் நட்பூக்களே”
காதல் வானவில்♥️♥️
நிற்கிறேன் நடக்கிறேன்காண்கிறேன் புரியலையே 🍃ஒன்றும் புரியலையே குழப்புதே தவிக்குதே இதுதான் காதலா!!! புரியலையே🍃 உன்னைக் காண்கையிலே நன்றாக இருக்குதே☘️புரியாமல் பாடுகிறேன்ரோஜாப்பூ 🌹கூட ஒன்று வாங்க ஆசைதான்எல்லாமே புதுசு இந்த தவிப்பு புதுசு உனக்காக என் இதயம் ❤️ஏனோ துடிக்குது💕உலகமே அழகான நந்தவனமாச்சு🌼🌺🌷🏵️💮🌸🥀🌹🌻உனக்கு புரியுதா என் தவிப்புதெரிந்தால் எனக்காக அரை நொடி கண்ணே காத்திருப்பாயா?👀 என்றென்றும் காதலாகஎன்றென்றும் நான் புன்னகைக்கபேரழகான ஒளிபொருந்திய உன் புன்னகையால் எனை நிரப்பு👄உன்னை என்றென்றும் காதலால் நிரப்ப என் கைகளைப் பற்றிக்கொள்💞எனக்காக என்னுள் இருக்கும்Continue reading “காதல் வானவில்♥️♥️”